சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி இரண்டே மாதங்களில் பிரிந்து போன நிலையில் இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரையொருவர் எல்லைமீறி பேசிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல் ஆளாக விஷ்ணுகாந்துக்கு சப்போர்ட் செய்து பதிவிட்டார் நடிகை ரிஹானா. முன்னதாக அர்னவ் விவகாரத்தில் அர்னவ் செய்த தவறுகளை அம்பலபடுத்திய ரிஹானா, விஷ்ணுகாந்துக்கு குட் பாய் சர்டிபிகேட் கொடுத்ததால் விஷ்ணுகாந்த் பக்கம் ஆதரவு பெருகி வந்தது.
இந்நிலையில், ரிஹானா குறித்து ரசிகர் ஒருவர் சம்யுக்தாவிடம் கமெண்டில் கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள சம்யுக்தா, ‘‘ரிஹானா விஷ்ணுகாந்த் கூட வாழ்ந்த மாதிரி சப்போர்ட் பண்றாங்க. என்ன பத்தி பேசுறாங்களே அவங்க பாஸ்ட்ட தோண்ட ஆரம்பிச்சா சிரிப்பா சிரிச்சிடும். ரிஹானா என் பிரச்சனையில மட்டுமல்ல யார் பிரச்சனைனாலும் முதல் ஆளா பேட்டி கொடுத்துடுவாங்க. ஏன்னா, அந்த டாப்பிக்கோட சேர்ந்து அவங்களும் பிரபலமாகி விடலாம் இல்ல! அதுக்குதான் இப்படி எல்லாம் விளம்பரம் செய்றாங்க. சரி இப்படியாச்சும் பொழச்சுட்டு போகட்டும்‘‘ என நக்கலாக பதில் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்யுக்தா ஆதரவாளர்கள் ரிஹானாவை கிண்டலடித்து வருகின்றனர்.










