சினிமாவில் தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை கொட்டி தீர்த்த பிரபல நடிகை

உலக அழகி பட்டம் பெற்று பின்னர் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த ‘தமிழன்‘ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

அவர் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகியும் தற்போது வரை பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் முன்னணி இடத்தில் தான் இருந்து வருகிறார். அவ்வப்போது பாலிவுட் சினிமா குறித்தும், சில நேரங்களில் தான் கடந்து வந்த பாதைகளை குறித்தும் தனது பேட்டிகளில் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அப்படி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் தனக்கு நேர்ந்த ஒரு கொடுமைச் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “ நான் சினிமாவில் நுழைந்த ஆரம்ப கால கட்டத்தில் பாலிவுட்டில் என்னை தேடி வந்த முதல் படத்தில் எனக்கு உளவாளி கதாபாத்திரம் என்பதால் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியின் போது எதிர்தரப்பு இளைஞன் ஒருவனை கவர்ச்சியால் உணர்ச்சியை தூண்டி மயக்கும் விதமாக காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் நான் ஒரு ஆடையை களைய வேண்டும். ஆனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் அந்தப் படத்தின் இயக்குனர் என்னை உள்ளாடையில் பார்க்க வேண்டும், இல்லையென்றால் ஏன் மக்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கக் போகிறார்கள்? என கேட்டார்.

மனிதத்தன்மையற்ற ஒரு தருணமாக இருந்தது. அன்றே அந்த படத்தில் இருந்து வெளியேறி கிளம்பி விட்டேன்.

இந்த தகவலை கேள்விப்பட்ட என் தந்தை இரண்டு நாட்கள்  என்னால் அவர்களுக்கு என்ன நஷ்டமானதோ அந்த தொகையை திருப்பிக்கொடுத்து விடு என்று சொன்னதால் அந்தத் தொகையும் திருப்பிக் கொடுத்து விட்டேன்“ என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்