பத்து வருடங்களுக்கு முன்பு நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ‘நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ்‘ ஆகிய படங்களில் நடித்த அவர், சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.










