ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இன்று காலை ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயணித்த டிரக்கை இடைமறித்ததையடுத்து, என்கவுன்டரின் போது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சண்டையில் டிரக் தீப்பிடித்துள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு டிரக் நடமாட்டம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் போலீஸார் லாரியை நிறுத்தினர். பாதுகாப்புப் படையினர் டிரக்கைத் தேடத் தொடங்கியதும், உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட்டனர். பதிலடித் தாக்குதலில் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் என்று முகேஷ் சிங் கூறினார். டிரக் டிரைவர் தப்பியோடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் சிங் கூறினார்.
என்கவுண்டரைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது மற்றும் நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 7 மணியளவில் என்கவுண்டர் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்