வீரப்பன் மரணத்தின் கடைசி நிமிடங்கள் மறக்க முடியாது – விஜயகுமார் ஐபிஎஸ் தகவல்

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை சூட்டு வீழ்த்தியபோது, அவரது கடைசி நிமிடங்களை மறக்க முடியாது என ஐபிஎ1 அதிகாரி விஜயகுமார் கூறினார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை கதி கலங்க வைத்தவர், சத்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன். இவரை சத்தியமங்கலம் என்ற பெயரை சொன்னதும், இவர் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும். 3 மாநில போலீசாருக்கும் பெரும் சவாலாக இருந்த காட்டு ராஜா, வீரப்பன். கடந்த 2004ம் ஆண்டு, முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அந்த தனிப்படையில், தற்போதைய டெல்லி கூடுதல் டிஜிபியாக உள்ள சஞ்சய் ஆரோரா உள்பட பலரும் இடம் பிடித்து இருந்தனர்.

2004 ஆகஸ்ட் 18ம் தேதி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி என்ற இடத்தில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து, ‘வீரப்பன்-சேசிங் தி பிரிகாண்ட்’ என்ற ஆங்கில புத்தக வடிவில் முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தற்போது ஒலி வடிவமாக்கப்பட்டு ஆடிபிள் ஆடியோ புக்ஸ் அண்டு போட்காஸ்டஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை தரமணியில் உள்ள இதழியல் கல்லூரி ஒன்றில் விஜயகுமார் வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர், பேசியதாவது:-

சந்தன மர கடத்தல், தந்தங்களுக்காக யானையை கொல்வது என என வீரப்பன் சட்டம்-ஒழுங்குக்கு எதிராகவே இருந்தான். அவரை, பிடிக்க சென்ற போலீசார், வன அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால், வீரப்பனை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.

பூலான்தேவி போல அவருக்கு அரசியல்வாதியாக ஆசை இருந்தது. அவருக்கு திருச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல அமைப்புகள் உதவி செய்தன. மலைவாழ் மக்களுக்கு வீரப்பன் பாதுகாப்பாக இருந்தார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு வீரப்பன் உதவி செய்தார். இதனால் அவரை அந்த மக்கள் கொண்டாடினர்.

அதேநேரத்தில் எங்களை பொறுத்தவரையில் வீரப்பன் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளி. ஆதாரங்களின் அடிப்படையில் வீரப்பன் சரணடைய நிறைய வாய்ப்புகளை அளித்தோம். ஆனால், வீரப்பன் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவரை, உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றளவிலும் இருக்கிறது. வீரப்பன் மரணத்தின் கடைசிக்கட்ட நிமிடங்கள் மறக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்