சின்னத்திரை பிரபலங்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பிரிந்து விட்டனர். இந்நிலையில் ஒருவரையொருவர் மாறி மாறி சோஷியல் மீடியாவில் குறை சொல்லி வருகின்றனர்.
அதற்கேற்றார் போல் நெட்டிசன்களில் பலர் சம்யுக்தாவிற்கு ஆதராக பேசி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்யுக்தா தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால், இன்று(மே.25) தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள்.
என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி“ என்று கூறியுள்ளார்.










