தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தனது 50-வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வடசென்னை அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்‘ டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதனை கொண்டாடும் விதமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தியேட்டரில் ‘வேலையில்லா பட்டதாரி‘ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதனுடன் ‘கேப்டன் மில்லர்‘ டீசரை திரையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கலந்து கொண்டார். அதில், அவர் கூறியதாவது, “ கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அண்ணா இயக்கி, நடிக்கும் தனுஷ் 50-வது படத்திலும் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்“ என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.










