கன்னடா மொழியில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ‘ படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவார். இந்நிலையில் இன்று(மே.5) கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது.
இதில் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதன்படி, பிரபல நடிகர் கிச்சா சுதீப் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “ அவரவர் தங்களது பிரச்சனைகளை மனதில் வைத்து அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும். நான் நடிகராக இங்கு வரவில்லை. இந்தியனாக வந்துள்ளேன். இது எனது கடமை“ என கூறியுள்ளார் நடிகர் கிச்சா சுதீப்.










