தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஐயா வைகுண்டநாதர் அவதார தினத்தை முன்னிட்டு, ஏற்கனவே கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் எனவும், அதற்கு மாற்றாக, வரும் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.










