நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. பெரிய வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் சிம்பு நடிக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் “ என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.
உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது. அற்புதங்கள் நிகழ்கின்றன“ என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது. இடைவெளிகளை குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள்“ என பதிவிட்டுள்ளார். மேலும் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கனவு நனவானது“ என பதிவிட்டுள்ளார்.










