பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் ‘தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி‘ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்களை விட அதிக வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்“ நான் நடித்த ‘பத்லாபூர்‘ என்ற படம் வரைக்கும் நான் கிரமாத்து பெண்ணாகத்தான் நடிக்க முடியும் என கூறினார்கள். ‘பத்லாபூர்‘ படத்திற்குப் பிறகு நான் செக்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் மட்டுமே செய்ய முடியும், என்னால் ஆடைகளை குறைத்து தான் நடிக்க முடியும் என்றார்கள். எனக்கு மூக்கு சரியில்லை என்று சிலர் பட வாய்ப்புகளை தர மறுத்தனர். சிலர் மார்பகம் சிறியதாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர்.
இன்று இந்த பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. நான் மூன்று அல்லது நான்கு கிலோ எடை அதிகமாக இருந்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் என கூறியுள்ளார். பெண்களை கேலி செய்பவர்கள் அதை தங்கள் உரிமை என நினைக்கிறார்கள்“ என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.










