தமிழில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன்.
இதைத் தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன்‘ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன்.
நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்‘ படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். மேலும் தற்போது ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
அதில் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக கூட நடிப்பேன்.
அதேபோல் அதிரடியாக சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.










