கர்நாடக சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை அமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து கலி ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகநம்பப்படுகிறது.
பெல்லாரி சகோதரர்கள் என அழைக்கப்படும ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி, கட்சியியால் தனக்கு ஏற்படும் அவனாமத்தால், இதை வைத்து புதிய கட்சியை அமைத்து தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுரங்க வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பிறகு அவருக்கும் கட்சிக்கும் இடையேயான பிணைப்பு இழுபறியாக மாறியது.
ஸ்ரீராமுலு பாஜகவால் வளர்க்கப்பட்டதால் இருவருக்குமிடையேயான பிரச்சனைகள் மேலும் வலுப்பெற்றதாக கூறப்படுகிறது. ஜனார்த்தன் ரெட்டி சில முறை டெல்லி சென்று பெரிய தலைவர்களிடம் தான் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். ஆனால், அவருக்கு தேவையான பதில் கிடைக்கவில்லை.
இந்தச் சிக்கல்கள் அனைத்தும் அவர் புதிய கட்சியை அமைக்கும் இடத்தை உருவாக்கியது. கர்நாடகாவில் வலுவான தலைவர்களில் ஒருவர் ஜனார்தன் ரெட்டி. அவர் உண்மையிலேயே கட்சி தொடங்கினால் அது பாரதிய ஜனதாவுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். அவர் பாஜகவின் வாக்கு சதவீதத்தையும், கட்சி வெல்லக்கூடிய இடங்களின் எண்ணிக்கையையும் பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.










