இந்தியா- சீனா வீரர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளது.
கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா மற்றும் சீனப்படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், இந்திய வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், சீன வீரர்கள் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியதால், இரு அவைகளும் முடக்கப்பட்டன. தொடர்ந்து இந்திய- சீன பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று (டிச.15) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வரும் சீனப்படையின் அத்துமீறல் தொடர்பாக, பெரும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. இதுதொடர்பாக ஐநாவில் இந்தியா சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து சீனாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் சீனப்படையினர், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.










