‘யாத்திசை‘ படத்தால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்: நடிகை ராஜலட்சுமி

தமிழில் திரைக்கு வந்த ‘யாத்திசை‘ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கோபாலகிருஷ்ணன் பரத நாட்டிய கலைஞர். படத்திலும் அதே கதாபாத்திரத்திலேயே நடித்து இருந்தார்.

இவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே பரத நாட்டிய கலையை முறையாக கற்றுள்ளார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ‘யாத்திசை‘ படத்தில் நடித்ததன் மூலம் ராஜலட்சுமி கோபால கிருஷ்ணனுக்கு மேலும் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

தனக்கு பொருத்தமான கதாபாத்திரம் மட்டுமன்றி வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். முதல் படமான ‘யாத்திசை‘ சினிமாவில் மிகப்பெரிய பயிற்சியையும் அனுபவத்தையும் கற்றுத் தந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்