‘கேஜிஎப்‘ இயக்குனர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான ‘கேஜிஎப்‘ படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

அதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் ‘சலார்‘ என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் வரை ‘சலார்‘ படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார் பிரசாந்த் நீல்.

ஆனால் இதற்கு முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பாதிக்க வேண்டாம் என ‘சலார்‘ குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார் பிரசாந்த் நீல்.

ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ‘ஆதிபுருஷ்‘ படத்தை விட ‘சலார்‘ படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.

இதனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட தற்காலிகமாக சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்து வெளியேறியுள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்