உக்ரைன் மீது கடந்த 10 மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முழுவீச்சுடன் ரஷ்யா எங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகிறது.
உலகின் மிகப்பெரிய தீவிரவாத செயல்களை செய்துவரும் ரஷ்யாவிற்கும் அதன் மக்களுக்கும், இது நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும். இதை தெரிந்தே ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளும் ரஷ்யாவின் செயலை கூர்ந்து கவனித்து வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
