முகப்பு அண்மை செய்திகள் விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகர் சிம்பு…!

விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகர் சிம்பு…!

காதல், அதிரடி, நகைச்சுவை உள்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து விட்ட  நடிகர் சிம்பு கேங்ஸ்டர் எனப்படும் மாபியா கும்பல் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ள படம் ‘பத்து தல‘. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்‘, ‘நெடுஞ்சாலை‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படப்பிடிப்பில் பணியாற்றிய பல்வேறு திரை கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ‘பத்து தல‘ படத்தின் திரைக்கதை எழுத்தாளர், எதிர்பாராமல் நடைபெறும் விசித்திர நிகழ்வு ஒன்றை பற்றி விளக்கி கூறினார்.

அதாவது இயக்குனர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து பணியாற்றிய பின்னர் பலருக்கு அடுத்தடுத்து திருமணம் நடந்து உள்ளது. சூர்யா, ஜோதிகா, ஆரி மற்றும் ஷிவாடா, பின்னர் கவுதம் கார்த்திக் என இயக்குனருடன் பணியாற்றிய பின்பு அவர்களுக்கு திருமணம் நடந்து உள்ளது என்ற விவரங்களை பட்டியலிட்டார். இதனை கேட்ட அனைவரும் சிம்புவை நோக்கி திரும்பினர். ஆனால் அதற்குள் சிம்பு, மொதல்லயே சொல்லி இருக்க கூடாதா….? என்று தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில் கூறினார். பத்து தல திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version