முகப்பு அண்மை செய்திகள் வதந்திகளை நம்ப வேண்டாம் – சூர்யா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம்

வதந்திகளை நம்ப வேண்டாம் – சூர்யா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம்

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் அமைத்து அதில் வரலாற்று சம்பவங்கள் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில், இப்படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் ஒரு முக்கிய வேடத்தில் ‘சீதா ராமம்‘ படத்தில் நடித்த மிருணால் தாக்கூர் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா மறுத்திருக்கிறார். சூர்யா 42-வது படத்தில் மிருணால் தாக்கூர் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தியாகும். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version