முகப்பு அண்மை செய்திகள் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய சாந்தினி தமிழரசன்

மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய சாந்தினி தமிழரசன்

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்‘. நாளைய இயக்குநர் டிவி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் சிவன் அறிமுக நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது, ‘வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த ‘குடிமகான்‘ உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையும் குடிமகன் என்று சொல்வார்கள், குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், குடிமகானாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது‘, என்கிறார்.

‘சித்துபிளஸ் 2‘ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். சிறுமுதலீட்டு படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்த அவர் பிறகு சின்னத்திரைக்கு சென்றார். அங்கு தாழம்பூ, இரட்டை ரோஜா தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version