முகப்பு அண்மை செய்திகள் கடவுளை அவமரியாதை செய்த இயக்குனர் லீனா மணிமேகலை.. கைது செய்யக்கோரி வழக்கு

கடவுளை அவமரியாதை செய்த இயக்குனர் லீனா மணிமேகலை.. கைது செய்யக்கோரி வழக்கு

பிரபல ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அவர் தற்போது ‘காளி‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். இதில் காளி உள்ளிட்ட சாமி வேடம் அணிந்திருப்பவர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில் வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீனா மணிமேகலையை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளில் என்னை கைது செய்ய இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கை விசாரித்து  நீதிமன்றத்தில் போலீசார் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன் மறு உத்தரவு வரும் வரை லீனாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version