இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் 6பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் ‘நாட்டு நாட்டு‘ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அதேபோல் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கீரவாணி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, “என் பெத்தண்ணாவை (பெரிய அண்ணன்) நினைத்து பெருமைப்படுகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.
