தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, ரஜினி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சாவித்ரி வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் அடுத்த சாவித்ரி என திரையுலகில் பெயர் எடுத்தவர். சமீபகாலமாக இவரும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் கமர்ஷியல் ரூட்டிற்கு மாறி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில காலமாக கவர்ச்சியில் இறங்கி வருகிறார். அதாவது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றையும் எடுத்து, ‘தைரியமாக பூக்கும்‘ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டாரா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
